இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/26/2013

ஐ.பி.எல். சென்னை போட்டிகளில் இலங்கை வீரர்கள் இல்லை

இந்தியன் பிரீமியர்லீக் (ஐ.பி.எல்) போட்டித் தொடரின் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளில் இலங்கை வீரர்கள் மற்றும் நடுவர்களை அனுமதிப்பதில்லை என்று ஐ.பி.எல் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. 

இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், சென்னையில் நடைபெறவுள்ள  ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்ககூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ள நிலையிலேயே மேற்படி நிர்வாகக் குழு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. 

இது குறித்து அணி நிர்வாகிகளிடம் உறுதிமொழி பெறப்பட்டுள்ளதாகவும், இலங்கை வீரர்களுக்கு ஏற்படும் இழப்பு சரி செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல்.நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா