இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/10/2013

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பிள்ளைகளின் தந்தை

சேலம் மாவட்டம், இடைப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, வளையசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் இவரது மகன் முருகன், வயது-40. இவரது மனைவி சின்னக்கண்ணு, வயது-30. இருவருக்கும், கடந்த 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர்.

சங்ககிரி – இடைப்பாடி மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் சர்வீஸ் ஸ்டேஷனில் முருகன் வேலை செய்து வருகிறார்.

இவருடன், வேலை செய்யும் இன்னொரு ஊழியரான காமராஜ். என்வருடைய ஆறு வயது மகள், கடந்த, 23-ம் திகதி தந்தையோடு வந்து, இரவு சர்வீஸ் ஸ்டேசனுக்கு வந்து அங்கேயே படுத்து தூங்கி விட்டார்.

அப்போது, சபலபுத்தி கொண்ட முருகன், அந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். இதில், அலறி துடித்த அந்த சிறுமி, நடந்த சம்பவத்தை, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும்,அன்று முதல், சிறுமி, மனநிலை பாதிக்கப்பட்டதை போல, இருந்து வருகிறார். இதுகுறித்து, சங்ககிரி மகளிர் போலீஸில் புகார் செய்யப்பட்டது.

பொலலிஸார், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டப்பிரிவுகளின் படி வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா