இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/08/2013

நிவாரணங்களுடனான புதிய மின் கட்டணம் 20ம் திகதி முதல் அமுல்


மேதினக் கூட் டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித் ததற்கு அமைய புதிய மாற்றத்துட னான மின்கட்டண அறவீடு இம்மாதம் 20ஆம் திகதிமுதல் அமுலுக்கு வருமென பொதுப் பயன் பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி ஜயதிஸ்ஸ.டி. கொஸ்தா தெரிவித்துள்ளார்.

முதல் 60 மின்அலகுகளைப் பயன் படுத்தும் பாவனையாளர்களின் மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்றும், 90 அலகுகள் முதல் 95 அலகுகள் வரையான மின் பாவனையாளர்களுக்கு நிவாரணக் கட்டணத்தில் சீராக்கல் வழங்கவும், 180 அலகுகள் வரையான மின் பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்தார். மின்பாவனையாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க முடியும்.

இதற்கமைய ஜனாதிபதி இரண்டு வகையான நிவாரணங்களை அறிவித்துள்ளார் என்றும் ஆணைக் குழுவின் தலைவர் மேலும் குறிப் பிட்டார்.
அதேநேரம், ஜனாதிபதி அவர்கள் அறிவித்த நிவாரணத்துடனான புதிய மின்கட்டண அறவீட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருப்பதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா