சம்மாந்துறை பிரதேசத்தில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு சவூதி அரேபிய நாட்டின் நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் அனுசரனையில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நிதி வழங்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் சம்மாந்துறை அலுவலகத்தில் இடம்பெற்றது.
மௌலவி ஏ.எல். ஆதம்பாவா தலைமையில் தலைமமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சுர் கலந்துகொண்டு 32 பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார். இங்கு உலமாக்கள், அரசியல் பிரமுகவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்கள்.
Bas TM
0 comments:
Post a Comment