(எம்.ரீ.எம்.பர்ஹான்)
அண்மையில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளையால்
நடாத்தப்பட்ட இரத்த தான முகாமில் கலந்து கொண்டு இரத்தம்
வழங்கியவர்களுக்கும் , இரத்த தான முகாமில் ஊழியர்களாக கடமையாற்றிய கிளை
அங்கத்தவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2013.07.07 அன்று SLTJ
சம்மாந்துறை காரியாலயத்தில் இடம் பெற்றது.இன் நிகழ்வில் இரத்தம் வழங்கிய 91
வழங்குநர்களுக்கும் ஊழியர்களுக்கும் சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது.
அஸ்ஸலாமு அலைக்கும்!!
SLTJ சகோதரர்களிடத்தில் மாற்றுக்கருத்து இல்லை என்று கூறிவிட்டு இதை ஏற்பாடு செய்த நீங்கள் மார்க்கம் வலியுறுத்தாத பெண்களின் ”நிகாபை” வலியுத்துவது போன்று காட்சிப்படுத்துவது ஒற்றுமைக்கு உலைவைக்கும் செயல் போன்று தெரிகிறதே!!
சம்மந்தப்பட்ட அந்நிருவாகியிடம் இது பற்றி தெளிவுபடுத்துங்கள்!
நன்றி!