இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/17/2013

பெண்களின் உள்ளாடைகளை திருடிய இளைஞன் கைது


பெண்கள் மற்றும் சிறுவர்களின் உள்ளாடைகளை திருடி, அவற்றை உடுத்திப்பார்த்த இளைஞனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை மேலதிக நீதவான் பிரஹசா ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ரத்மலானை, சில்வெஸ்டர் வீதியிலுள்ள வீட்டுக்குள் புகுந்து அங்கு காயப்போடப்பட்டிருந்த பெண்களின் உள்ளாடைகள் மற்றும் சிறுவர்களின் ஆடைகளையே குறித்த நபர் திருடி உடுத்திப்பார்த்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவின் மூலமாகவே குறித்த சந்தேகநபர் இனங்காணப்பட்டாத தெரிவித்த பொலிஸார். அந்த இளைஞன் ரத்மலானை 5 ஆம் குறுக்கு வீதியில் வசிப்பவர் என்றும் தெரிவித்தனர்.
Bas : TM

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா