இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/02/2013

ஒலுவில் துறைமுகம் ஜனதிபாதியால் திறந்து வைக்கும் தருணம்


(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலுவில் மீன்பிடி மற்றும் வர்த்தக துறைமுகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நேற்று (01) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இப்பிரமாண்டமான நிகழ்வில் துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபே குணவர்த்தன, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல.எம்.அதாஉல்;லா, நீதி அமைச்சர் ரவூப்ஹக்கீம், சிரேஷ;ட அமைச்சர் பி.தயரத்ன,கிழக்குமாகாண ஆளுனர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பபை, பாராளுமன்ற உறுப்பினர்களான பீ.எச்.பியசேன, எச்.எம்.எம்.ஹரீஸ், பைஸால் காசீம், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், எம்.எம்.ஜெமீல் மாவட்டசெயலாளர் நீல் டீ அல்வீஸ், உதவி மாவட்ட செயலாளர் கே.விமலநாதன் உட்பட அமைச்சன் செயலாளர்கள், துறைமுக அதிகாரசபையின் உயரதிகாரிகள்,திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்த கொண்டனர்.

இந்நிகழ்வின்போது விழாக்குழுத் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா