
இந்த புத்தகத்தைப் படிப்பதால் மாணவர்களின் பாலியல் ஆசை தூண்டப்படும் என்பதால் இந்த தடை உத்தரவு என்று கூறப்பட்டுள்ளது.
லூகாரைச் சேர்ந்த கிராமர் பள்ளி என்ற தனியார் பாடசாலையில் அறிவியல் பாடம் நடத்துவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. பெற்றோர்களிடமிருந்து இதுதொடர்பாக புகார் வந்ததால்தான் இந்த தடை உத்தரவாம்.
இதேபோல பல்வேறு தனியார் பாடசாலைகளிலும் அறிவியல் பாடம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து மாகாண கல்வி அமைச்சர் ராணா மசூச் அகமது கூறுகையில், பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததால் தடை விதித்துள்ளோம். பாலியல் ஆசையைத் தூண்டும் வகையில் இந்தப் பாடசாலைகளின் அறிவியல் பாடம் உள்ளதால் தடை விதிக்கப்படுகிறது. இதை ஏற்க முடியாது என்றார் அவர்.
மேலும் இந்த அறிவியல் பாடம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாம் இந்த மாகாண அரசு.
0 comments:
Post a Comment