இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/07/2013

சம்மாந்துறையில் உலமாக்களுக்கும் மாணவர்களுக்கும் பாராட்டு நிகழ்வு

(ஹனீபா,எம்.ரீ.எம்.பர்ஹான்)
ஜம் இய்யதல் குர்ஆனில் ஹக்கீம் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள குர்ஆன் மதரசாக்கள் மூலம் அல்குர்ஆனை முழுமையாக சிறப்பாக ஓதி முடித்த மாணவர்களுக்கும,; உலமாக்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (07) காலை 10 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் அமைப்பின் தலைவர் அல்ஹாபிழ் மௌலவி ஏ.எல்.அப்துல் றஸீட் தலைமையில் நடைபெற்றது.

இந்த கௌரவ சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதீதியாக முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஸ்ஸோஹ் எம்.எச்.எம்.சமீல் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக பிரதிப் பணிப்பாளர் எம்.ஐ.றபீக் இஸ்மாயீல், முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர்களான மௌலவி எம்.ஏ.சுபைதீன், ஏ.எல்.எம்.அஸீம் மற்றும் சிரேஷ;ட சட்டத்தரணியும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஸ்தபா உட்பட உலமாக்கள், கல்வி மான்கள் பலரும் கலந்த கொண்டனர்.

இவ்வைபவத்தின் போது மாணவர்களுக்கு சான்றிதழ்;களுடன் அல்குர்ஆன் பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா