இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/06/2013

இலத்திரனியல் பிரஜைகள் அறிக்கை அட்டை செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நான்கு நாள் வதிவிடப் பயிற்சி செயலமர்வு


(அகமட் எஸ். முகைடீன்)

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் பொருட்டு இலக்ரோனிக் சிட்டிசன் றிபோட் காரடட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இலத்திரனியல் பிரஜைகள் அறிக்கை அட்டை செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நான்கு நாள் வதிவிடப் பயிற்சி செயலமர்வு தம்புள்ள அமாயா லேக் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் இறுதி நாள் நிகழ்வு நேற்று (03.09.2013) மாலை 7.30 மணியளவில் ஆசியா மன்றத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திருமதி தினேசா டீ சில்வா விக்ரமநாயக்க தலைமையில் நடைபெற்றது.

ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத்தின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுள்ளாஇ கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபேகுணவர்தனஇ விஷேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப்இ உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் ஆலோசகர் சுனில் பெர்ணான்டோஇ கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் ஏ.சுபாகரன்இ ஆசிய மன்றத்தின் ஆலோசகர் டாக்டர். கோபி குமார்இ அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள்இ கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலிஇ ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகள்இ சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரனையுடன் ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயல்திட்டத்தின் கீழ் இலத்திரனியல் பிரஜைகள் அறிக்கை அட்டையினை நவீன தொழில்நுட்பத்தினை பிரயோகித்து நடைமுறைப்படுத்துவதக்கு வழிவகுக்கும் வகையில் மேற்படி  வதிவிட பயிற்சி செயலமர்வினை கிழக்கு மாகாண சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் உள்ளூராட்சி திணைக்கள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தது. இது தென்கிழக்கு ஆசியாவிலே முதன் முதலாக அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே மேற்படி செயல்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.  

இவ்வதிவிட பயிற்சி செயலமர்வின்போது குறித்த செயல் திட்டத்தின் பயன்பாடுஇ நடைமுறை மற்றும் எதிர்கால திட்டம் தொடர்பாக ஆசிய மன்றத்தின் துறைசார் வல்லுநர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் அனுரைனையுடனும் அம்பாறைஇ மட்டக்களப்புஇ திருகோணமலை ஆகிய  மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களின் பங்களிப்புடனும்  கல்முனை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசங்களில் மேற்குறித்த இலத்திரனியல் பிரஜைகள் அறிக்கை அட்டை செயல்திட்டத்தினை முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு நவீன தெழில்நுட்பத்தை பயன்படுத்தி சேகரிக்கப்படுகின்ற தகவல்களை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு முதல் உள்ளூராட்சி திணைக்களங்கள் மற்றும் மன்றங்களின் அதிகாரிகள் உடனுக்கு உடன் பார்வையிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை முன்னெடுக்க முடியும். இச்செயல்திட்டத்தின் மூலம் எதிர்காலங்களில் உள்ளூராட்சி மன்றத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரம் தொடர்பான சுயாதீனமான மதிப்பீட்டு அறிக்கை கிடைப்பதுடன் பொது மக்களுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்குமான நெருங்கிய உறவு மேலும் வலுப்படுத்தப்படும். அத்தோடு குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவு திட்ட தயாரிப்பின் போது பொது மக்களின் தேவைகளுக்கு முன்னுருமை வழங்கி நிதிகளை ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்பும் இதன் மூலம் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது மேற்படி செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் அம்பாறைஇ மட்டக்களப்புஇ திருகோணமலை ஆகிய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவலகங்களுக்கு 'டெப்லட்ஸ்'களும் பயிலுனர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா