-ஹனீபா
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை முகாமைத்துவ சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (29) வெள்ளிக் கிழமை மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்;கத்தின் தலைவர் வீ.சுகிர்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் கீழ் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நாட்டினுடைய அபிவிருத்தியிலும் வறுமைத்தணிப்பிலும் முழுமூச்சுடன் உழைத்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவரையும் முகாமைத்துவ உதவியாளர்களாக திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தினுள் உள்வாங்கும் பொருட்டு இந்த நியமனம் வழங்கி வைக்கப்படுகின்றன.
திவிநெகும திணைக்களத்தினுள் உள்வாங்கப்படுகின்ற நியமனக் கடிதங்கள் நாட்டின் சகல மாவட்டங்களிலும் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இந்த முகாமைத்துவ உதவியாளர் நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்வில் அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், மற்றும் அம்பாறை மாவட்ட செயலக அபிவிருத்தி திட்ட முகாமையாளர் யூ.எல்.எம்.சலீம் உட்பட பலர் கலந்த கொண்டனர்.
0 comments:
Post a Comment