இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/25/2013

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஆறாவது வருடாந்த பொதுக்கூட்டம்

(ஹனீபா)
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஆறாவது வருடாந்த பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் றெஸ்டோரண்ட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் தேசமான்ய யூ.எல்.எம்.பைஸர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் திருமதி வாசுகி அருள்ராஜா பிரதம அதிதியாகவும்இ அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன்இ மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் திணைக்கள சிரேஷ்ட நிர்வாகச் செயலாளர் கே.கனகசுந்தரம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்இ மட்டக்களப்பு மாவட்ட பதில் அஞ்சல் அத்தியட்சகர் எம்.தம்பிஐயாஇ மாகாண நுண்ணாய்வு பரிசோதகர் எம்.இஸட்.எம்.பாறூக் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும்இ மட்டக்களப்பு அஞ்சல் பயிற்சிக் கல்லூரி பிரதம போதனாசிரியர் பீ.நரேந்திரன்இ தமிழ் பேசும் அஞ்சல் ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.உமேஷ்காந்த்இ அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்க மட்டக்களபபுக் கிளை செயலாளர் எஸ்.ரதீஸ்வரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபரும் தற்போதைய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது சங்கத்தின் உத்தியோக பூர்வ ரீசேட்இ யூ.பீ.டி.ஒ செய்தி பத்திரிகை என்பன வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் புதிய ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா