அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அஸ்ஹர் றிபாஸ் கல்முனை நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதிவானாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் முகாமைத்துவ உதவியாளராக பணிபுரியும் இவர் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் இரண்டாம் நிலை ஜஐ.சி.ஏ.எஸ்.எல்-சீ.ஏ.பி-ஐஐ)ஸ மாணவரும், இலங்கை கணக்கீட்டு தொழிநுட்ப வல்லுநர் நிறுவனத்தின் இறுதி நிலையை ஜஏஏடி(பீ.எப்)ஸ நிறைவு செய்தவருமாவார். மேலும் இவர் தனது மூன்றாம் வருட வணிக முகாமைத்துவ வெளிவாரிப் பட்டப்படிப்பினை (பி.பி.ஏ) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து வருகிறார்.
அட்டாளைச்சேனை 'ஐடியல் பியுபிள்ஸ் லீக் -ஐ.பி.எல்' சமூகத்திற்கான ஒன்றியத்தின் பொதுச் செயலாளரான இவர் அட்டாளைச்சேனை அஷ்ரஃப் விளையாட்டுக் கழகத்தின் செயலாளருமாவார்.
சமூக சேவைகளில் மிகவும் ஈடுபாடு கொண்ட இவர் உதுமான் கண்டு அஸ்ஹர், உதுமாலெவ்வை பாதுன்னிஸா தம்பதியரின் புதல்வருமாவார்.
0 comments:
Post a Comment