(எம்.ரீ.எம்.பர்ஹான்)
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் மற்றும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கிழக்கு மாகாண கிளைகள் ஒன்றிணைந்து 1000 நபர்களை இலக்கு வைத்து நாடாத்தும் மாபெரும் இரத்த தான முகாம், இரத்த தானம் சம்மந்தமான விழிப்புணர்வு கண் காட்சியும் இன்று 2014.01.14 காலை 9.00 மணி முதல் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம் பெற்று வருகின்றது.
இன் நிகழ்வில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இன் நிகழ்வில் கலந்து இரத்த தானம் செய்யும் அனைவருக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் நற்சான்றிதல் வழங்கப்படுகின்ரமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இங்கு அதிகமான ஆண் பெண்கள் இரத்தம் வழங்குவதை இங்கு காணக்கூடியதாக உள்ளது.
0 comments:
Post a Comment