(எம்.ரீ.எம்.பர்ஹான்)

இக் கூட்டத் தொடரில் சம்மாந்துறை தெகுதி அவிவிருத்திக்காக 177 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான அல் ஹாஜ் ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்கள் தெரிவித்தார்கள்.
இன் நிதியை கொண்டு சம்மாந்துறை பிரதேச செயலகம், நாவிதன் வெளி பிரதேச செயலகம், இரக்காமம் பிரதேச செயலகம் ஊடாக கிராமங்களுக்கான வீதி மற்றும் பாலங்கள், கிணறுகள், சனசமூக நிலையங்கள், வடிகான்கள், மின் இணைப்பு, நீர்விநியோகம், மயான புனரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன் நிதியை ஒதுக்கீடு செய்து தந்தமைக்காக சம்மாந்துறை தெகுதி மக்கள் சார்பாக கௌரவ ஜனாதிபதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர்களுக்கு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
0 comments:
Post a Comment