இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/15/2014

ACJU சம்மாந்துறை கிளையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்


(ஹனீபா)
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் சம்மாந்துறை கிளையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் அண்மையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ;Nஷக் எம்.ஐ.யூசூப் முப்தி தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் சம்மாந்துறை கிளையின் கடந்த கால நிர்வாக செயற்பாடுகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

இந்த நிகழ்வை அடுத்து எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.

இதன் பிரகாரம் பொது ஆலோசகராக அஸ்ஷேக் எம்.பி.அலியாh.; ஹழரத் (தேவ்பந்தி) அவர்களும், புதிய தலைவராக அஸ்ஷேக் எம்.ஐ.அப்துல்காதர். ஹழரத் (மிஸ்பாஹி) அவர்களும் உப தலைவர்களாக அஸ்ஷேக் கே.எல்.ஆதம்பாவா (தப்லீகி, மதனி), அஸ்ஷேக் யூ.எல்.மஹ்றூப் (தப்லீகி, மதனி), செயலாளராக அஸ்ஷேக் எஸ்.இஸ்மாலெப்பை (தப்லீகி), உபசெயலாளர் அஸ்ஷேக் ஏ.எல்.எம்.முபீன் (தப்லீகி), பொருளாளர் அஸ்ஷேக் எம்.எல்.எம்.ஸாஹிர் (மன்பாஈ) ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாக சபையின் உறுப்பினர்களாக அஸ்ஷேக் எல்.அப்துல் றஹீம் (தப்லீகி), அஸ்ஷேக் எம்.ஐ.ஹஜ்ஜூமுஹம்மத் (தப்லீகி றியாழி), அஸ்ஷேக் ஏ.எல்.ஸறூக் (இன்ஆமி), அஸ்ஷேக் ஏ.எல்.ஹஜ்ஜூமுஹம்மத் (பலாஹி), அஸ்ஷேக் ஏ.ரீ.ஏ.ஜலீல் (தப்லீகி), அஸ்ஷேக் எம்.வை.அஹமத்ஜலீல் (ஹாமி), அஸ்ஷேக் எம்.எல்.எம்.பஷீர் (தப்லீகி,மதனி), அஸ்ஷேக் ஏ.அப்துல் ரஷீட் (தப்லீகி), அஸ்ஷேக் யூ.எல்.எம்.அமீன் (தப்லீகி), அஸ்ஷேக் ஏ.எல்.எம்.றிப்கான் (நளீமி), அஸ்ஷேக்.எல்.எம்.ஸலாஹூதீன் (இஸ்லாஹி), அஸ்ஷேக் ஏ.எல். அப்துல் காதர் (தப்லீகி), அஸ்ஷேக் ஐ.எல்.அப்துல் கபூர் (தப்லீகி,மதனி), அஸ்ஷேக் யூ.கே.ஜபறுல்லாஹ் (தப்லீகி), அஸ்ஷேக் எம்.ஐ.எம்.இஸ்ஹாக் (நளீமி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் அனுமதி கிடைத்துள்ளதாகவம் சம்மாந்துறை கிளையின் புதிய செயலாளர் அஸ்ஷேக் எஸ்.இஸ்மாலெப்பை தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா