(ஹனீபா)
கல்வியமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைவாக அக்கரைப்பற்று வலய மட்ட மீலாதுன் நபி விழா இன்று (13) அட்டாளைச்சேனை அல்ஜெசீறா வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச் செனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.கஸ்ஸாலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார் ஏணைய அதிதிகளாக வலயமட்ட இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் மௌலவி யூ.எம்.நியாஸி, ஆசிரிய ஆலோசகர் என்.சம்சுதீன். புhடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எல்.சம்சுதீன் உட்பட பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இம்மீலாத்விழா நிகழ்வின் ஒரு அங்கமாக அனைத்து மாணவர்களுக்கும் அன்னதானம் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment