(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரின் வேண்டுதலின் பெயரில் 2013 தயட்ட கிருல்ல நிதியில் இருந்து ரூபா 25 மில்லியன் செலவில் புதிதாக நெற்களஞ்சிய அறை ஒன்று சம்மாந்துறை பாம் காணியில் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.
சம்மாந்துறையில் நீண்ட காலமாக நிலவிவந்த நெல் களஞ்சியப்படுத்தல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாகவே இந்த பணியை முன்னெடுத்து வருவதாகவும். இனிவரும் காலங்களில் நெல் களஞ்சியப்படுத்தல் பணி சிரமமின்றி மேற்கொள்ளப்படும் எனவும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் அல் ஹாஜ் ஏ.எம்.எம. நௌஷாட் அவர்கள் தெரிவித்ததோடு இன்னுமொறு நெற் களஞ்சிய அறை நிர்மானிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
0 comments:
Post a Comment