இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/08/2014

சது/அறபா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

(ஹனீபா)
கல்வி என்பது தேடலாகும் அதாவது தொடர்தேடலாகும் தேடலின் தேடலில் திரவியங்கள் பல கிடைக்கும் என்ற தாரகமந்திரத்தின் அடிப்படையில் யார் கல்வியை தேடிப்படிக்கின்றாரே அவர் வாழ்கையில் ஜெயம் பெறுவர் என கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை கல்வி வலயப் பிரிவுக்குட்பட்ட சது/அறபா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த புலமையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (08) பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் யூ.எல்.எம்.இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அவர் இங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் ஒரு பிள்ளையின் கல்வி வளர்ச்சியில் அதிபர் ஆசிரியர்கள் என்பவர்களின் பங்களிப்பு மாத்திரம் போதாது பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

பேற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்க அனுப்பிவிட்டோம் நமது பிள்ளை கல்வியை முழுமையாக பெற்றுவிடுவான் என்று பாராமுகமாக இருந்து விட்டால்; அந்த ஆசைநிராகையாக ஆகிவிடும் நமது பிள்ளை பாடசாலைக்கு செல்கின்றான் அவன் சரியான முறையில் கல்வியை கொண்டு செல்கின்றானா பாடசாலையில் சரியான முறையில் கல்வி போதிக்கப்படுகின்றதா சரியான தலைமைத்துவப்பண்புகள் ஒழுக்க விழுமியங்கள் முகாமைத்துவ செயற்பாடுகள் நடைபெறுகின்றனவா என்பது தொடர்பான ஆய்வை பெற்றோர்கள் மெற்கொள்ள வேண்டும் அவ்வாறில்லாமல் பிள்ளையின் பொக்கில் விட்டுவிட்டால் பிள்ளையின் கல்வி எங்கோ சென்றுவிடும் அது பாரிய விளைவுகளையும் ஏற்படத்திவிடும் எனவேதான் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி விடயத்தில் விளிப்படைய வேண்டும்.

சம்மாந்துறைப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக கல்வியில் எற்பட்ட வீழ்சியினை சீர் செய்து மீளக் கட்டியெழுப்பும் தூய தூர நோக்குடன் கட்சி பேதங்களை தூக்கி வீசிவிட்டு நான் உட்பட எமது மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட் அகியோர் ஒன்றினைந்துள்ளோம் இதற்க வலுச் சேர்க்கும் வகையில் எமது மக்கள் ஒன்றினைந்து எமத ஊரின் கல்வி மற்றும் எனைய அபிவிருத்திகளில் கைகோர்த்து செயற்பட முன்வரவேண்டும்; எனக் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

எமது மாணவர்களிடையே நல்ல திறமைகள் புதைந்து கிடக்கின்றது அதனை நாம் புடம்போட்டு சீர்செய்யவேண்டும் அதனூடாக நல்ல ஒலுக்கமுள்ள கல்விச்சமுகத்தினூடாக எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கும் சாதனையாளர்களை நல்ல தலைமைகளை உருவாக்கிக் கொள்ள முடியும் எனவும் கூறினார். இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர். தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட், உதவி தவிசாளர் ஏ.கலீலுர்றஹ்மான், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.ஏ.றச10ல், அட்டாளைசேனை கல்விக் கல்லூரியின்; உபதலைவர் சத்தார் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் பலரம் கலந்த கொண்டனர். பலர் கலந்து கொண்டனர்.










0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா