இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதில் தான் பெருமையடைவதாகவும் மூன்றாவது திருமணம்
செய்து கொள்ளவில்லை எனவும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது
உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
'நான் மூன்றாவது தடவையாக திருமணம் செய்துகொள்ளவில்லை. அது
நம்பகத்தன்மையற்ற செய்தி. மேலும் நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதனால்
நான் பெருமையடைகின்றேன்.
எனது முடிவிற்கு எனது குடும்பம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது இதனால் எனது
தந்தைக்கும் எனக்கும் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை என அதில்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment