(ஹனீபா)
பொருளாதார அபிவிருத்தியினை இலக்காகக் கொண்ட தேசிய வரவு செலவுத்திட்டம் தொடர்பான பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படத்துவதற்கு பயனாளிகள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தும் வேலைத்திட்டம் இன்று (11) அம்பாறை எச்.எம்.வீரசிங்க விளையாட்டு மைதானத்தில் அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டீ அல்வீஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸீல் ராஜபக்ஷ கலந்து கொண்டார் கௌரவ அதிதிகளாக அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா, பீ.தயரத்ன, கிழக்கு மாகாண ஆளுணர் ரியர்அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர்அட்மிரல் சரத்வீரசேகர, சட்டத்தரணி சிறியாணி விஜேவிக்ரம, சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பைஷhல் காசீம், எம்.ரீ.ஹசன்அலி, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.ஐ.எம்.மன்சூர், விமலவீர திசாநாயக்க உட்பட மடாகாண சபை உறப்பினர்கள்,பிரதேச சபைகளின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் திணைக்களத்தலைவர்கள், மதத்தலைவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள். பொதுநால அமைப்புக்களின் தலைவர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்த கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்த கொண்ட அமைச்சர் பஸீல் ராஜபக்ஷ உரையாற்றுகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கமநெகும புறநெகும,திவிநெகம வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு பூரண விளக்கமளித்தார்.
0 comments:
Post a Comment