இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/03/2014

யார் ஒதுங்கிச்சென்றாலும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களை நாங்கள் கைவிடமாட்டோம் –கல்முனை முதல்வர்

-எம்.வை.அமீர், எம்.ஐ.சம்சுதீன்-

கல்முனை மாநகரசபையின் ஆளுகைக்குள் வாளும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கு அமர்ந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகளில் எவராவது ஒருவர் அவர் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் மக்களை விட்டு ஒதுங்கிவிட்டால் அவர் சென்றுவிட்டார் என்பதற்காக அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களை நாங்கள் கைவிடமாட்டோம் என கல்முனைமாநகரசபையின்  முதல்வர் சட்டமுதுமானி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (2014-03-31) கல்முனை மாநகரசபையின் சபா மண்டபாத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்படி கருத்துத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதல்வர் நிஸாம் காரியப்பர் தான் கல்முனை மாநகரசபையின் எல்லைக்குள் உள்ள எந்தப்பிரதேசத்தையும் வேறாக்கி பார்ப்பதில்லை என்றும் இதுவிடயத்தில் ஏனைய மக்கள் பிரதிநிதிகளோ அல்லது மக்களோ கவலைப்படத்தேவையில்லை என்றும் தெரிவித்த முதல்வர் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக சபை உறுப்பினர்களுக்கு விளக்கிக்கூறினார்.

கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் ஏ.அமிர்தலிங்கம்இஇசட்.ஏ.எச்.ரஹுமான், ஏ.எம்.ரியாஸ், எம்.ஐ.பிர்தௌஸ்இ ஏ.எச்.எச்.எம்.நபார் ஏ.ஏ.பசீர் போன்றோரும் அவர்கள் சார்ந்த மக்களின் தேவைகளை மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்தனர்.






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா