இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/20/2014

உயர்தரம் கற்கும், கற்கவிருக்கும் மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு

-எம்.ஐ.சம்சுதீன், எம்.வை.அமீர்-
இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரணதர  பரீட்சைக்கு தோற்றி கல்விப்பொதுத்தராதர உயர் தரத்துக்கு செல்ல காத்திருக்கும் மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு 2014-04-19 ம் திகதி கல்முனை சாஹிரா கல்லுரி பழைய மாணவர்கள் சங்க கொழும்பு கிளையின் அனுசரணையுடன் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் சேர் ராசிக்பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ்,  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக பீட சிரேஷ்ட விரிவுராயாளர் ஹம்சியா அப்துல் ரவுப், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி என்.ஆரீப் அவர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட விரிவுரையாளர் ஏ.றமீஸ் மற்றும் தொழில்பயிற்சி அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் ஏ.ஏ. ஜாபீர் போன்றோரும் பங்கு கொண்டிருந்தனர்


கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம். பதுர்தீன் மற்றும் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் அதிபர் எம்.நவாஸ் போன்றோரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டிருந்தனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா