-எம்.வை.அமீர்-
சாய்ந்தமருது பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரிஸ்வானுல் ஜன்னாஹ் ஹாரீஸ் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் (2014-04-29)இன்று காலை சாய்ந்தமருது பொது சுகாதார வைத்திய காரியாலயத்தில் வைத்து சாய்ந்தமருது பிரதேசத்தில் இருக்கும் மகளிர் சங்கங்களில் இருந்து சுமார் 50 பேருக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச பொதுசுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சஹீலா இஸ்ஸதீன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த வறிய பெண்களுக்கு நுளம்பு வலைகளை வழங்கி வைத்தார். இதன் போது மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரிஸ்வானுல் ஜன்னாஹ் ஹாரீஸ் அவர்களும் பயனாளிகளுக்கு நுளம்பு வலைகளை வழங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment