இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/05/2014

சாய்ந்தமருது ஜும்மாபள்ளிவாசலினால் மாணவர்கள் கௌரவிப்பு

-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-

இறுதியாக நடந்த பரீட்சைகளில் சாய்ந்தமருதில் இருந்து தோற்றி சிறந்த அடைவுகளை பெற்ற சுமார் 108 மாணவ மாணவிகளுக்கு கொரவம் வழங்கும் நிகழ்வு இன்று (2014-05-04)  சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மாபள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்குமாகாண சபை உறுப்பினரும் உலக சமாதான அமைப்பின் இலங்கைக்கான தூதுவருமான ஏ.எம்.ஜெமீல் மற்றும் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிசாம்மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் சிறப்பு அதிதிகளாக முன்னாள் பிரதி முதல்வர் ஏ. ஏ.பஷீர், கல்முனை வலைய கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜலீல், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமாசபை தலைவர் என்.எம்.எம்.முஜீப், கல்முனை போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி AW. அப்துல் கfப்பார் சாய்ந்தமருது கல்விப்பணிப்பாளர் ஐ.எல்.ஏ. ரகுமான் போன்றோரும் பள்ளிவாசலின் மரைக்காயர் சபை உறுப்பினர்களும் பெரும்திரளான மக்களும் கலந்து கொண்டனர்

இங்கு வகுப்புகளில் சிறந்த பக்களிப்பாற்றய் ஆசிரியர்களுக்கும் கௌரவமும் பரிசில்களும் வழங்கப்பட்டது. குறிப்பிட தக்கது.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா