இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/13/2014

அல்அமானா நற்பணி மன்றத்தின் ஒன்பதாவது வருடாந்த நிறைவு நிகழ்வு


-எம்.வை.அமீர்-
அல்அமானா நற்பணி மன்றத்தின் ஒன்பதாவது வருடாந்த நிறைவு நிகழ்வு (2014-06-08)சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் அல்அமானா நற்பணி மன்றத்தின் தலைவர் ஏ.எல்.ஏ.பரீட் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை அபிவிருத்திகுழுவின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டார்.

சுனாமியால் பாதிக்கப்பட்டு காணிகளை இழந்து தங்களது அமைவிடங்களை பாதுகாப்பான இடங்களில் அமைக்க வேண்டும் என்ற அவாவில் சாய்ந்தமருதின் மேட்குப்புறமாக நெற்செய்கை பண்ணப்படாத தருசு நிலங்களை துண்டம் துண்டங்களாக சுமார் 1350 குடும்பங்கள் கொள்வனவு செய்து நேரடியாக கிட்டத்தட்ட 15000 மக்கள் பயன்பெறும் அளவுக்கு விசாலமானா குறித்த காணிகளை கொண்டுள்ள மக்கள் அவர்களது நலன்களை பேணும் வகையில் ஏற்படுத்தப்பட்டு செயற்பட்டுவரும்  அல்அமானா நற்பணி மன்றத்தின் ஒன்பதாவது வருடாந்த நிறைவு நிகழ்வில்


பத்து விதவை பெண்களுக்கும் ஒரு இஸ்லாத்தை புதிதாக தழுவிய பெண்ணுக்கும் தலா 10000 ரூபாய் பொறுமதியான காசோலைகளும் வறுமையில்இருக்கும் இரண்டு குமார் பிள்ளைகளுக்கு காநித்துண்டுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா