இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/20/2014

கல்முனையில் கண்டனம்

-எம்.வை.அமீர்-
 அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதலைக் கண்டித்து பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்திருந்த கண்டம் தெரிவிக்கும் பேரணி இன்று கல்முகைக்குடி முகைதீன் ஜும்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது.

அமைதியான முறையில் இடம்பெற்ற இக்கண்டன பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நியாயம் வழங்க வேண்டும், பொதுபலசேனாவை தடை செய்ய வேண்டும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற சுலோகங்களை காணக்கூடியதாக இருந்தது.


 பெருந்திரளான இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்ட இப்பேரணியில் கல்முனை அரசியல்வாதிகள் என்ற ரீதியில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் மாத்திரமே கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா