இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/01/2015

சம்மந்துறையின் பூர்வீக மரம் குடை சாய்ந்தது

சம்மாந்துறை பிரதேசத்தின் பழமையினை எடுத்துரைக்கும் மூன்று பெரும் மரங்கள் உள்ளன.அவை எமது வரலாற்றின் பல தருணங்களில் நினைவு கூரப்படுகின்றன.ஒன்று ஹிஜ்ரா சந்தையில் அமைந்திருந்த ஒரு ஆலமரம்.அது ஹிஜ்ரா சந்தை புணரமைப்பின் போது வெட்டியகற்றப்பட்டது.அடுத்து பூமரத்து சாந்தி என அழைக்கப்படும் புதுப்பள்ளி அருகே உள்ள மரம்.அடுத்து தேசிய பாடசாலையில்

 அமைந்துள்ள மரம்.பூமர சாந்தியின் மரமானது அழிவடைந்து வருகின்றது யாவரும் அறிந்த ஒரு விடயமே.ஆனால் இன்றையதினம் சம்மாந்துறை தேசிய பாடசாலையில் கம்பீரமாய் காட்சியளித்த மரம் திடீரென குடைசாய்ந்துவிட்டது.இது ஊர் மக்கள் அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தினை அளித்துள்ளது.இது சம்மந்தமான காட்சிகளே இங்கு எம்மால் பிரசுரிக்கப்படுகின்றன.

 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா