இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/01/2015

தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீடக் கூட்டம் 3ஆம் திகதி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் தனித்து போட்யிடுவதா  அல்லது ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் ஆராயும் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) தேசிய காங்கிரஸ் கட்சியின் தலையைகத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை புதன்கிழமை(01) தெரிவித்தார்.

 கட்சியின் தலைவரும்; உள்ளூராட்சி, மாகாண சபைகளின் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் தலைமையில் 03ஆம் திகதி பி.ப. 4.00 மணிக்கு நடைபெறவள்ள இக்கலந்துரையாடலில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.  இதன்போது அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
-TM-

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா