பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும 10 இலட்சம் மனைப் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் 4ஆம் கட்ட பயிர் விதைகளை மக்களுக்கு வழங்கும் வைபவம் நாடாளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை 9.59 மணிக்கு கிழக்கு திசையை நோக்கி நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதான நிகழ்வு சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை, கூட்டுறவு, சமூக சேவைகள,தகவல் தொழில் நுட்பம் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்டார்.
இவ்வைபவத்தில் திவிநெகும திட்டப் பயனாளிகளுக்கான விதைகள் அதிதிகளால வழங்கி வைக்கப்பட்டதுடன் விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தென்னங் கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment