இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிழக்கு மாகாணத்தின் புனிதத்தலமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஒளி விழா” இன்று (18) திருச்சிலுவை திருத்தல மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பங்குத் தந்தை ஏ.ஜேசுதாஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு மறை மாவட்ட குருமுதல்வர் அருட்பணி பிரான்சிஸ் சேவயர்டயஸ், கார்மேல் பாத்திமா கன்னியர் மடம் அருட்சகோதாp திரேஸ் நோயலின், திருச்சிலுவை மகா வித்தியாலய அதிபார்எம்.பி.எல்.கிருஸ்துராஜா உட்பட பெருமளவான பொது மக்களும்இ சிறுவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவூ கூரும் வகையில் கரோல் கீதம் இசைக்கப்பட்டதுடன்இ கலை நிகழ்வூகளும்இ நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. இந்நிகழ்வின் போது திருமறைப் பாடசாலையில் திறமை காட்டிய மாணவர்களுக்கு அதிதிகளினால் பாpசில்களும் வழங்கப்பட்ட இதேவேளைஇ அதிதிகளுக்கும்இ கலந்து கொண்ட சிறுவா;கள் மற்றும் பொது மக்களுக்கும் நத்தாh; தாத்தாவினால் பாpசில்களும்இ இனிப்புப் பண்டங்களும் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment