இன்று மாலை தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஆர்.எம்.ரியாஸ் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அரசியல்வாதிகள் ஆய்வாளர்கள் , ஆர்வலர்கள் , உலமாக்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்
.இந்த நிகழ்வில் உரையாற்றிய நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது . தற்போது முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு பதில் கூறும் வகையில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நூல்கள் வெளிவர வேண்டும்.
முஸ்லிம்கள் வந்தான் வரத்தான்கள், அண்டி சுரண்டி பிழைக்க வந்தவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள் முஸ்லிம் சமூகத்தை வன்முறைக்குள் உள்வாங்க வேண்டும் என சிலர் செயற்படுகிறார்கள் அவர்களுக்கு முஸ்லிம் சமூகம் கொடுத்து ,பகிர்ந்து வாழும் சமூகம் என்பதை புரியவைக்க வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் இக் கால கட்டத்தில் இவ்வாரான பணி பாராட்டத் தக்கதாகும் எனவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment