இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/05/2013

30 குடும்பங்களுக்கு நுண்கடன் உதவிகள் வழங்கி வைப்பு

(ஹனீபா)
தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 
குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான நுண்கடன் உதவிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.


திருக்கோவில் பிரதேச செயலகத்தில் தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் வீ.அரசரத்தினம் தலைமையில் கடனுதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, நிhவாக உத்தியோகத்தர் கனகரத்தினம், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரீ.ஜெயாகர், சமுர்த்தி முகாமையாளர்களான எச்.அப்துல் அலீம், எம்.கமல பிரபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் 30 குடும்பங்களுக்கு இக்கடன் வழங்கப்பட்டன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா