இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/05/2013

மலையகத்தில் இன்று காலை முதல் கடுங்காற்று: மக்கள் அச்சம்


மலையகப்பகுதியில் இன்று காலை முதல் வீசுகின்ற கடுங்காற்றினால் பல்வேறு பகுதிகளில் சிறுபாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை , றம்பொடை போன்ற பகுதிகளில் இன்று காலை வீசிய கடுங்காற்றினால் மரங்கள் முறிந்து வாகனங்களின் மீதும் வீடுகளின் மீதும் விழுந்துள்ளன.

அத்துடன் பொகவந்தலாவை , மஸ்கெலியா , நோர்வூட் போன்ற பகுதிகளிலும் கடுங்காற்று வீசத்தொடங்கியுள்ளதால் குடியிருப்பாளர்கள் தமது வீடுகளிலிருந்து வெளியே வருவதற்கு அச்சமடைந்துள்ளனர்.

மேலும் கடுங்காற்றினால் மலையகத்தில் பல பகுதிகளில் மின்சார தடையும் ஏற்பட்டுள்ளது.

அதே வேளை கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி , கம்பளை போன்ற பகுதிகளிலும் இன்று காலை முதல் கடுங்காற்று வீசிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா