இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/10/2013

றிசானாவில் மரண தண்டனையைக் கேள்வியுற்ற தாய் நெஞ்சில் அடித்து கத்தினார். வீட்டிலிருந்து...!


தனது மகளின் மரணத்தை தாயால் தாங்க முடியவில்லை கதறி கதறி நெஞ்சில் அடித்து அடித்து அழுதாள்.
மகளின் வருகைக்காக காத்திருந்த தாய்க்கு அதிர்ச்சியில் உறைந்து போனாள் . அவளோடு மூதூரும் சோகத்தில் உறைந்து போனது மூதூர் றிசானா நாபீக்கிற்கு நேற்று மதியம் சவுதிஅரேபியாவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கேள்வியுற்றதும் றிசானாவின் தாயார் செய்வதறியாது திகைத்து நின்றார்.நம்ப மறுத்தாள்.

தந்தை மௌனித்தார். இரு தங்கைகளும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.றிசானாவின் குடும்பம் மாத்திரமல்ல அவளது மரணம் தொடர்பான செய்தி கிடைக்கப்பெற்றதும் மூதூரே துயக்கடலில் மூழ்கிப் போனது. 

இலங்கை வாழ் மக்கள் அனைவரும் துடித்துப் போயினர்.பாலூட்டி சீராட்டி வறுமையிலும் அன்போடு வளர்த்த தனது மகளின் மரணத்தை தாயால் தாங்க முடியவில்லை கதறி கதறி நெஞ்சில் அடித்து அடித்து அழுதாள். 

இரு சகோதரிகளும் ஒப்பாரி வைத்தனர். தந்தையால் விம்மினார். சோகம் நெஞ்சை உருக்கியது. தாயின் அழுகையைக் கண்ட பொது மக்களும் கண்ணீர் சிந்தி அழதனர்.

சிலர் தாயின் குமுறலைக் காண முடியாமல் றிசானாவின் வீட்டிலிருந்தே வெளியேறிச் சென்றனர். பள்ளிவாசல்களிலும் விசேட தூ ஆப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

றிசானா இன்று விடுதலை செய்யப்படுவார் நாளை விடுதலை செய்யப்படுவார் என்று மக்களை ஏமாற்றி தமது அரசியலை நடாத்திய அரசியல்வாதிகளுக்கு சாபமிட்டுக்கொண்டே அவர்களை தூற்றியபடி மக்கள் கலைந்து சென்றனர்.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா