இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/21/2013

இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் திரைப்படம் இயற்றிய நபர் இஸ்லாத்தை ஏற்றார்


இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் திரைப்படம் இயற்றிய நபர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றார்.

ஒல்லாந்து நாட்டின் தீவிர வலதுசாரி கட்சியின் அங்கத்தவரான “ஈர்னாத் பஙன்டூர்” தான் இஸ்லாத்தை ஏற்று மதீனா சென்று இறைதூதர் (ஸல்) அவர்களின் கப்ரின் முன்னால் நின்று கண்ணீர் மலுக அழும் நாள் வரும் என்பதை ஒரு போதும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். 

   “உக்காஸ்” என்ற சவுதி பத்திரிகை அவருடன் மதீனா நகர் சென்று அவரை பேட்டி கண்டது. அதில் அவர் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் தீவிர வலதுசாரி கட்சியில் தான் ஒரு அங்கத்தவராக இருந்து குறித்த திரைப்படத்தை இயற்றுவதில் பங்கு கொண்டதாகவும், அதனை அடுத்து இஸ்லாமிய உலகில் எழுந்த பாரிய எதிர்பலைகளை தொடர்ந்து தான் இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இத்தகை தேடலின் போது இறைத்தூதரின் மீது முஸ்லிம்கள் வைத்துள்ள பற்றின் ரகசியத்தை தன்னால் புரிய முடிந்தது. அந்த பின்னணியில் தான் இஸ்லாத்தை ஏற்றதாக அவர் குறிப்பிட்டார்.

  இறைத்தூதரின் கபுருக்கு முன்னால் நின்று அவர் கடுமையாக அழுததாக குறித்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. 

   இஸ்லாத்தை பற்றிய ஆழமான தேடல் தான் இளைத்த பாரிய தவறை தனுக்கு தெளிவாக உணர்தியதாகவும் அதனை தொடர்ந்து தான் முஸ்லிம்களை படிபடியாக நெருங்கியதாகவும் இறுதியில் தான் இஸ்லாத்தை ஏற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 அடுத்த மனிதனுக்கு நேர்வழி அளிப்பது மனிதனின் கையில் இல்லை. அல்லாஹ்வே நேர்வழி கட்டுகிறான் என்பதற்கு இச் சம்பவம் சிறந்த உதாரணமாகும்.JM

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா