இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/13/2013

11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 36 வயதான பெண் கைது


சிறுவனொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக கூறப்படும் திருமணமாகாத 36 வயது பெண்ணொருவரையும் 74 வயது நபரொருவரையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விஷேட பொலிஸ் குழுவினர் கடந்த 9 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட 11 வயது சிறுவன் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் கல்வி பயில்கின்றான்.

பாடசாலையில் காவலாளியான 74 வயது நபரே சிறுவனை ஏமாற்றி அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெற்றோர் இது குறித்து பாதுக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றபோது முறைப்பாட்டை ஏற்க பாதுக்க பொலிஸார் மறுத்ததால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளனர். இதையடுத்து விஷேட பொலிஸ் குழுவினர் 74 வயது பாடசாலை காவலாளியைக் கைது செய்துள்ளனர். பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில் அயலிலுள்ள 36 வயது பெண்ணொருவரும் இச் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியது தெரிய வந்ததை அடுத்து அப் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பெண் சிறுவனை ஏமாற்றி தமது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Bas VI

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா