அட்டன் நோட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவில் மூன்றரை வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக 14 வயது மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
நோட்டன் பொலிஸ் பிரிவில் தெபட்டன் பகுதியில் வசிக்கும் தமது மகளை அருகில் வசித்த சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக சிறுமியின் பெற்றோரால் செவ்வாய்க்கிழமை பொலிஸில் செய்யப்பட்;ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த பாடசாலை செல்லும் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்கு நாவலாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நோட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment