(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (26.06.2013) சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதஉல்லா தலைமையில் நடைபெற்றது.
இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சிறியாணி விஜய விக்ரம, பீ.எச்.பியசேன, மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, சுகாதார சுதேச வைத்தியத் துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்;சுதீன், எம்.ராஜேஸ்வரன்,பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவி பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்தல் லத்தீப், திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், கணக்காளர்; ஏ.எல் மஹ்றூப், உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் திணைக்களங்களின் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பலரும் கலந்த கொண்டனர்.
இநத் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சம்மாந்துறைப் பிரதேச சபைக்குட்பட்ட விதீ அபிவிருத்தி, நீர்பாசனம், கல்வி, சுகாதாரம் விளையாட்டுத்துறை உட்பட சகல திணைக்களங்களினதும் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாகவும் திணைக்களம் மற்றும் கூட்டுத்தாபணங்கள்,சபைகள் வாரியாக தனி;த்தனியாக ஆராயப்பட்டு முடிவுகள் மெற்கொள்ளப்பட்டன.








0 comments:
Post a Comment