எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களில் 70 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
தற்போதைய கணக்கெடுப்பின்படி ஒரு கோடி பேரை கடுமையான எய்ட்ஸ் தாக்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அவர்கள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
மேலும் வருகிற 2015-ம் ஆண்டில் 65 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைவர், அல்லது பாதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவற்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது.







0 comments:
Post a Comment