சம்மாந்துறை வலய கல்விக் கண்காட்சி சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் பாடசாலையில் இன்று (2013.07.02) காலை 8.00 மணி அளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது .இன் நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர்,மாகாண சபை உறுப்பினர் கலையரசன்,சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் எம்.கே.எம்.மன்சூர்,பாடசாலை அதிபர் ஹபீரா ஷரீப் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு 20 பாடசாலை காட்சிக் கூடங்களும் 12 நிறுவன காட்சிக் கூடம் உட்பட மொத்தமாக 32 காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று 11.00 AM மணி வரை ஏழாயிரம் அனுமதி சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரும்பாலான மாணவர்கள் கண்காட்சியை பார்வை இடுவத்தற்க்காக வரிசையில் நிற்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
இன்ஷாஅல்லாஹ் இக் கண் காட்சி நாளை நாளை மறுதினமும் இடம் பெரும்.





















0 comments:
Post a Comment