இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/29/2013

கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்ரமவினை நேற்று (28.08.2013) ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது மாநகர சபையின் நிதிக் குழு உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், ஏ.எம்.பறகத்துல்லா, ஏ.அமிர்தலிங்கம் மற்றும் மாநகர சபை கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

இதன்போது கல்முனை மாநகர சபைக்கு வரவேண்டிய 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளிற்கான முத்திரை வரி வருமானம் கிடைக்கப் பெறுவதில் உள்ள தாமதம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக குறித்த ஆண்டுகளிற்கான முத்திரை வரி வருமானமான 16 மில்லியன் ரூபா எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னதாக விடுவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

இங்கு மாநகர சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் முதல்வர் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்களால் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய முதல்வர் இன, மத, கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் தனது சேவையினை வழங்குகின்றார் என தெரிவிக்கப்பட்டது.

கல்முனை மாநகர அபிவிருத்தி நடவடிக்கைகளிற்கு தேவையான உதவிகளையும் ஒத்தாசைகளையும் முடிந்தளவு மேற்கொள்வதாக ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா