தேசிய காங்கிரஸின் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இன்று (05) அக்கரைப்பற்று மாநகர வளாகத்தில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் தி அல்வீஸ், மேலதிக மாவட்ட செயலாளர் கே.விமலநாதன், சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட், மாநகர முதல்வர் அதாஉல்லா சக்கி உட்பட இரானுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் உட்பட திணைக்களத் தலைவர்கள் கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் பிரதேச,நகர,மாநகர சபைகளின் உறுப்பினர்கள் பலரும் கலந்த கொண்டனர்.
இவ்வைபவத்தின் போது மௌலவி எம்.என்.எம்.குத்தூஸ் அவர்களினால் பாயான் நிகழ்த்தப்பட்டன.










0 comments:
Post a Comment