இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/24/2013

பிள்ளை நேயப்பாடசாலை தொடர்பான சிறப்புகள் முன்வைப்பு நிகழ்வு


(ஏ.எம். தாஹாநழீம்)
கிழக்கு மாகாணத்தில் உள்ள பிள்ளை நேயப் பாடசாலைக்கிடையிருந்து சிறந்த பாடசாலையாக வலயத்தில் இரண்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, அப்பாடசாலைகளுக்கிடையிலான முன்வைப்பு நிகழ்வு 14.09.2013 ஆந் திகதியன்று திருகோணமலை சென்மேரிஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர் எம்.ரீ. நிஸாம், மற்றும்  ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் பீ. உதயகுமார் கலந்து கொண்டனர்.

மேலும், சம்மாந்துறை கல்வி வலயம் சார்பாக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் இந் முன்வைப்பில் கலந்து கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலை சார்பாக  அதன் அதிபர் ரீ.எம். தௌபீக், பிரதி அதிபர் ஏ.எம்.தாஹாநழீம், ஆசிரியர்களான எம்.எம். விஜிலி, எம்.எஸ். சிறாஜடீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா