இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/22/2013

தேர்தல் முடிவுகள்


வடக்கை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி



பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 25 வருடங்களின் பின் இடம்பெற்ற வடமாகாண சபைத் தேர்தலின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் 213,907 மொத்த வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. 

முல்லைத்தீவில் 28,226 மொத்த வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், கிளிநொச்சியில் 37,079 மொத்த வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி தம் வசப்படுத்தியுள்ளது. 

இதேவேளை வவுனியாவில் 41,225 மொத்த வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், மன்னாரில் 33,118 மொத்த வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) கைப்பற்றியுள்ளது. 

இதன்படி தமிழரசுக் கட்சி மொத்தமாக 28 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வடமாகாணத்திற்கான இரண்டு போனஸ் ஆசனங்களும் தமிழரசுக் கட்சிக்கே கிடைக்கப்பெறும். 

எனவே வடமாகாணத்தில் 30 ஆசனங்களைப் கைப்பற்றி தமிழரசுக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 

வடமாகாணம் சுமார் 25 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக நேற்று (21) மாகாணசபைத் தேர்தலை எதிர் கொண்டது. வட மாகாணத்தில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 488 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருந்தனர். 

வடமாகாணத் தேர்தல், அபிவிருத்திக்கும் அரசியல் உரிமைக்கும் இடையிலான போட்டியாகவே அனைவராலும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் தமது உரிமையை வென்றெடுப்பதற்கான ஆணையை வடக்கு மக்கள் இட்டுள்ளனர் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



மத்திய மாகாணத்தை வசப்படுத்தியது ஆளும் கட்சி

மத்திய மாகாணத்திற்கான இறுதித் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. 


இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 716247 (60%) வாக்குகளைக் பெற்று 36 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது. 

330815 (27%) வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி 16 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

ஐனநாயகக் கட்சி 45239 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 29285 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும் வசப்படுத்தியுள்ளன. 

மலையக மக்கள் முன்னணி 24913 வாக்குகளுடனுடம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17788 வாக்குகளுடன் தலா ஒரு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.



வடமேல் மாகாணத்திலும் ஆளும் கட்சியின் ஆதிக்கம்


வடமேல் மாகாணத்திற்கான இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 705188 (66%) வாக்குகளுடன் 34 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சி 257011 (24%) வாக்குகளுடன் 12 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

ஐனநாயகக் கட்சி 46114 வாக்குகளுடன் 3 ஆசனங்களையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 27860 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 19624 வாக்குகளுடன் 1 ஆசனத்தையும் வசப்படுத்தியுள்ளன.

1 comments:

  • முஸ்லிம் குரல் says:
    September 22, 2013 at 1:48 PM

    நாசம் வந்துட்டு முஸ்லிம்களுக்கு எதிர்பாருங்கள் இன்சாஹ் அல்லாஹ்

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா