கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்புத் திணைக்களத்தின் கிழக்கு மாகாண மட்ட சிறுவர்தின நிகழ்வு நேற்று (01) மாலை சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளர் எம்.முபாரக் தலைமையில் நடைபெற்றது.
'மது ஒழியட்டும் சிறுவர் வாழ்வு மலரட்டும்' எனும் தலைப்பில் நடைபெற்ற இவ்விழாவின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை, கூட்டுறவு, சமூக சேவைகள்; அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்த கொண்டார்.
கௌரவ அதீதியாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை, கூட்டுறவு, சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், உதவிச் செயலாளர் ஹூசைன்டீன், கிழக்க மாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் எஸ்.மணிவண்னன், பிரதேச செயலாளர்களான ஏ.மன்சூர், எம்.எம்.நஸீர், எஸ்.எல்.எம்.ஹனீபா, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க ,மற்றும் திணைக்களத் தலைவர்கள் அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் உட்பட கழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரக் கணக்கானோர்; கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறுவர்களுக்காக மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்த கொண்டவர்களுக்க பரிசில்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன அத்துடன் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற சிறுவர் அபிவிருத்தி சங்கங்களுக்கு காசோலைகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இந்த வைபவத்தில் சிறுவர் துஷ;பிரயோகங்களை உணர்த்தும் குறுந் திரைப்படங்கள் பலவும் காட்சிப்படுத்தப்பட்டன.
0 comments:
Post a Comment