(அகமட்
எஸ். முகைடீன்)
சர்வதேச
சிறுவர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மல்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம் ஏற்பாடு
செய்திருந்த கலை கலாச்சார நிகழ்வும் பரிசலிப்பும் வித்தியாலய அதிபர் அல்ஹாஜ்
எம்.எஸ்.எம்.ஐ.மதனி தலைமையில் இன்று (01.10.2013) நடைபெற்றது.
இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப், கௌரவ அதிதியாக கல்முனை
வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் ஆகியோர் கலந்து
சிறப்பித்த இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு மற்றும் உள
சமூக உத்தியோகத்தர் எம்.எச் வஹாப் இஸ்லாஹி சிறப்புரை நிகழ்த்தினார்.
இதன்போது சிறுவனர்
தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிறிக்கெட் மற்றும் யோக்கட் உண்ணல் போன்ற விளையாட்டு
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் இரண்டாம் தவணைப்
பரீட்சையில் வகுப்பு ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள்
வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
புலமைப் பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்த மல்ஹறுஸ்
ஸம்ஸ் மகா வித்தியால மாணவர்கள் இருவரையும் இந்நிகழ்வின்போது பாராட்டிய முதல்வர்
கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவ்விருவருக்கும் தலா 10,000.00 ரூபா பரிசாக வழங்கினார்.
அத்தோடு எதிர்வரும் க.பொ.த.(சா/த) பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் அதி விஷேட “A” சித்தியினை
பெறுகின்ற மல்ஹறுஸ்
ஸம்ஸ் மகா வித்தியால மாணவர் ஒவ்வொருவருக்கும் தலா 50,000.00 ரூபா பரிசாக
வழங்குவதாகவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment