(ஹனீபா)
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி நிந்தவூர் பெண்கள் பிரிவின் முன்மாதிரி நிகழ்ச்சி கல்வி அமைச்சினால் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள புதிய கல்வி ஆண்டில் முதலாம் நாள் பாடசாலை ஆரம்பிக்கும் போது கற்றலுக்கு ஏற்ற விதத்தில் பாடசாலையை தயார் செய்தல் எனும் சுற்று நிறுபத்துக்கு அமைவாக இலங்கை ஜமாஅதே இஸ்லாமி நிந்தவூர் பெண்கள் பிரிவினரால் தனது சமூக சேவை பகுதியின் ஓர் அங்கமாக பெண்கள் பிரிவின் நிந்தவூர் ஊழியர்கள், பெற்றார்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்போடு நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் முலுமையான சிரமதான நிகழ்ச்சியினை முதலாவதாக நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த சிரமதான நிகழ்வு சம்பந்தமாக பாடசாலை அதிபர் கருத்து தெரிவிக்கையில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி நிந்தவூர் பெண்கள் பிரிவினரால் ஏற்பாடு செய்த இந்த செயற்பாடு சமூகத்துக்கு முன்மாதிரி மிக்க வழிகாட்டல் எனவும் இவ்வாரான செயற்பாடுகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து நடாத்த வேண்டும் எனவும் தெரிவித்து தங்களது நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
0 comments:
Post a Comment