(ஹனீபா)
சுனாமி அனர்த்தம் நடைபெற்ற 9வது வருட ஞாபகாத்தமாக கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் எற்பாட்டில் மைஹோப் குழுமத்தின் அனுசரனையுடன் வசதி குறைத்த குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் (27) மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியின் ஆரம்பபிரிவு கட்டிடத்தில் குவாசி நீதிபதி எம்.என்.எம்.இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரீ.எல்.மனாப், கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் எஸ்.சிறிரங்கன்,அதன் செயலாளர் ஏ.ஜே.எம்.ஹனீபா, மைஹோப் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் லயன் சித்தீக் நதீர், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளர் லயன் றிஸ்வி யஹ்ஷர், உட்பட பலர் கலந்த கொண்டனர்.
ஆயிரம் ரூபா பெறுமதியான 60 பொதிகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளன.
0 comments:
Post a Comment