(ஹனீபா)
கல்வியமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைவாக அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் நவீன முறையில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா இன்று (16) அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபையின் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்த கொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
மேலும் இந்த வைபவத்தில் அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.எம்.முனாஸ், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அமீன், ஆசிரிய ஆலோசகர் யூ.எம்.நியாஸி, பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் அதிபர் எம்.ஐ.எம்.நியாஸ் உட்பட பலர் கலந்த கொண்டனர்.
இக்கட்டிடம் பொற்றோர்களின் பங்களிப்புடன் நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment